kitchen ingredients to remove dandruff : உங்க கிச்சன்ல இருக்கிற இந்த ஒரு பொருளே போதும்! இனி உங்களுக்கு பொடுகு தொல்லையே இருக்காது!
பொடுகுத் தொல்லை என்பது ஆண் பெண் என இரு பாலருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஒரு நாளைக்கு 20 முதல் 60 முடிகள் உதிர்வது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் மேற்பட்ட முடிகள் கொட்டும் பொழுது நிச்சயம் முடிக்கான கவனம் அதிகம் தேவைப்படும். முடி கொட்டுதல் ஒரு பக்கம் நம்மை படுத்தி எடுத்தாலும் மறுபக்கம் அந்த பொடுகு தொல்லையினால் ஏற்படும் அரிப்பு. பொது இடங்களிலோ அல்லது ஏதேனும் முக்கிய நபர்களுடன் தொடர்பில் இருக்கும் பொழுது இந்த அரிப்பு ஏற்பட்டால் தலையை சொரிந்து கொண்டேவா இருக்க முடியும்? அப்படி அனுப்பினால் சொரிந்து கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கும்?பொடுகு பிரச்சனை ஆனது எந்த வயதினருக்கு வரும் எந்த வயதில் நிரந்தரமாக அகலும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு முறை பொடுகு வந்து விட்டால் அது நம் தலைமுடியை விட்டு போகவே போகாது.
பொடுகை தொல்லையை தீர்ப்பதற்கு நிறைய ஆன்டி டான்ட்ரப் ஷாம்பூக்கள் விற்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தினாலும் முழுமையாக இந்த பொடுகு தொல்லை விலகாது. மேலும் இந்த பொடுகு பிரச்சனை தீர்ப்பதற்கும் அதனால் ஏற்படும் அரிப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கும் பல ட்ரீட்மென்ட்கள் உள்ளன.விலை உயர்ந்த அத்தகைய நவீன டான்ரப் போக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வதற்கு அனைவரிடமும் அவ்வளவு பண வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த ஒரு பண செலவும் இல்லாமல் வீட்டில் உள்ள கிச்சன்களில் நாள்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டே உங்கள் தலைமுடியில் உள்ள பொடுகினை நிரந்தரமாக விரட்டலாம்.
வேப்பிலை ஹேர் மாஸ்க்
பொடுகுத் தொல்லை என்றாலே அவற்றை போக்குவதற்கு முதலில் அனைவரும் பரிந்துரைப்பது வேப்பிலை தான். வேப்பிலையில் உள்ள கசப்புத் தன்மை கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் வேரோடு அழிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. பொடுகு தொல்லை உள்ளவர்கள் வேப்பிலையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கின்ற நீரில் போட்டு நன்றாக மேலும் கொதிக்க விடவும்.
பிறகு ஒரு தட்டை வைத்து அதனை மூடி வைத்து விடவும். நன்றாக ஆரியபின் இந்த வேப்பிலை கொதித்து ஆரிய நீரை தலைக்கு தேய்த்து குளிக்கவும். சாதாரணமாக ஷாம்பு கொண்டு தலையை அலசியபின் கடைசியில் இந்த வேப்பிலை நீரை தலையில் ஊற்றி அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம் வேப்பிலையில் உள்ள கசப்புத் தன்மையின் காரணமாக பொடுகு முற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். வேப்பிலையை அரைத்து பத்து நிமிடங்கள் தலையில் வைத்து பிறகு குளிப்பது வேப்பிலை ஹேர் மாஸ்க் என்று கூறுவார்கள். இப்படியும் வேப்பிலையை பயன்படுத்தலாம்.இப்படி பயன்படுத்துவதன் மூலம் வேப்பிலை சிறந்த ஒரு இயற்கை கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கற்பூரத்தை நொறுக்கி அதில் கலந்து இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் தலையில் தேய்த்து விட்டு பிறகு தூங்கவும். மறுநாள் காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் தலையை அளசவும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடி காண்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும், மேலும் தலையில் உள்ள பொடுகு கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
வெங்காயம்
சின்ன வெங்காயம் தலைமுடிக்கு சிறந்த போஷாக்கினை கொடுக்கும். சின்ன வெங்காயம் தலைமுடிக்கு மிகவும் நல்லது என்பதனை நமது முன்னோர்கள் பல வழிமுறைகளில் கூறியுள்ளனர். 10 சின்ன வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து அதன் சாறை பிழிந்து முடியின் வேர்க்கால்கள் முதல் முடியும் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்த்து அப்படியே ஒரு 20 நிமிடங்கள் வைக்கவும். சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியில் உள்ள பொடியினை முற்றிலும் அகற்றும் தன்மையுடையது. வாரம் ஒரு முறையாவது சின்ன வெங்காயம் தேய்த்து தலை குளித்து வந்தால் சிறந்த தீர்வினை கொடுக்கும்.
வால் மிளகு
நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் விலகும் இந்த வால்மிளகும் வெவ்வேறு மிளகு வகையாகும். இந்த வாழ் மிளகு பார்ப்பதற்கு மிளகை விடசற்று வித்தியாசமாக இருக்கும். மிளகு போல சாதாரணமாக வட்ட வடிவில் மட்டும் இல்லாமல், இந்த மிளகிற்கு பின்னால் சிறிய வாய் போன்ற ஒரு குச்சி இருக்கும்.
இந்த வாழ் மிளகை நன்றாக மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து, இதனுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இந்த கலவையை தலையில் உள்ள ஸ்கேல்ப் பகுதிகளில் மற்றும் முடியின் வேர் பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக தேய்த்து ஒரு 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சாதாரண அல்லது குளிர்ந்த நேரினால் தலையை அளசவும்.
வினிகர்
சாதாரணமாக ஷாம்பூ அல்லது ஏதேனும் சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசி விட்டு, பிறகு கண்டிஷனர் பயன்படுத்தி தலையை அலசாமல், அதற்கு பதில் சிறிதளவு வினிகரை தண்ணீருடன் சேர்ந்து கலந்து தலையை அலசவும். இது போல் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் பொடியினால் ஏற்படும் அரிப்பு நீங்கி பொடுகும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
வெந்தயம்
வெந்தயம் முடிக்கு மிகவும் ஒரு நல்ல மருந்தாகும். வெந்தயம் முடிக்கு பளபளப்பை கொடுக்கும். சிறந்த ஷாம்பு ஆகவும் மற்றும் சிறந்த கண்டிஷனராகவும் செயல்படும். நறுமணத்தில் சிறந்து விளங்கும்.
வெந்தயத்தை நான்கு அல்லது ஐந்து டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, வெந்தயம் மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி ஊற வைக்கவும். குறைந்தது 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் நன்றாக ஊற வேண்டும். மறுநாள் காலை மிக்ஸியில் அரைத்து வெந்தயத்தை தலையில் அப்ளை செய்யவும். வெந்தயம் இயற்கையாகவே அரைத்த பின் இயற்கையான ஷாம்பூ போன்ற நுரையையும் தரும் அதே சமயம் சிறந்த வாசனையும் தரும் அதே சமயம் இயற்கையான கண்டிசனராகவும் செயல்படும். வாரம் ஒரு முறை வெந்தயம் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் பொடுகு நீங்கியும் காணப்படும்.