best oils that will help in growing density eyebrows: உங்கள் புருவம் அழகாக அடர்த்தியாக இல்லையா? இயற்கையாக உங்கள் புருவத்தை அடர்த்தியாக மாற்றலாம்! இத ட்ரை பண்ணி பாருங்க!
பிளாக் அண்ட் வொயிட் திரைப்படங்களில் நடிகைகள் தங்களின் புருவத்தை மெல்லியதாக வளர்த்திருப்பார்கள். அது பழைய டிரண்ட். ஆனால் இப்பொழுதோ அடர்த்தியான மற்றும் நீளமான பார்ப்பதற்கு ஒரு அழகான வானவில் போல தோற்றமளிக்க கூடிய புருவத்தை தான் அனைத்து பெண்களும் விரும்புகிறார்கள். பலருக்கு புருவத்தில் சரியாக அக்கறையில்லை. அதனால் புருவத்தை சரியாக கவனிப்பதில்லை. முகத்தின் அழகை முதலில் எடுத்துக்காட்டுவது புருவம் தான். அந்த புருவம் பார்ப்பதற்கு மெல்லிசாக இருந்தால் நன்றாகவா இருக்கும்? புருவத்தில் முடி அடர்த்தியாக இல்லாமல் லேசாக இருக்கிறது என்பதற்காக புருவத்தின் மேல் ஐப்ரோ அல்லது ஏதேனும் மைகளை பயன்படுத்தி அடர்த்தியாக காட்டுகிறீர்கள். ஏதேனும் நீர் பட்டாலோ அல்லது முகத்தை கழுவினாலே அவை அனைத்தும் நீரோடு கரைந்து விடும். தற்பொழுது பல ட்ரீட்மென்ட் உள்ளன. புருவத்தை அடர்த்தியாக காட்டுவதற்கு மட்டுமே தவிர, அவற்றின் மூலம் புருவத்தின் முடி அடர்த்தியாக இருக்காது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ், சோப், மற்றும் முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், பவுடர்கள் என பல உள்ளன. அவைகள் நமக்கே தெரியாமல் நமது புருவத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியை இழக்க செய்கிறது. இனி கவலைப்பட வேண்டாம். இந்த கட்டுரையை முழுமையாக படித்து இயற்கை முறையில் எந்த ஒரு பக்க பாதிப்புகளும் இல்லாமல் உங்கள் புருவ முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் நீளமாகவும் வளர்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பல டிப்ஸ்களில் உங்களுக்கு எது வசதியாகவும் உங்கள் நேரத்திற்கு எது தகுந்தவையாகவும் உள்ளனவோ அவற்றை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். இதன் பலன் வெகுவிரைவில் உங்களுக்கு மாற்றத்தை தரும்.
விளக்கெண்ணெய்
எண்ணெய் வகைகளிலேயே சற்று அடர்த்தி கூடுதலாக உள்ளது இந்த விளக்கெண்ணெய் தான். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நமது முடியும் அடர்த்தியாக வளரும். விளக்கெண்ணெயில் இயற்கையாகவே புரதச்சத்து, வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இதை பயன்படுத்துவதன் மூலம் புருவத்தின் வேருக்கு நேரடியாக ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இதனால் புருவம் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
பயன்படுத்தும் முறை
முடிகளை வளர வைக்க தூண்டுவதற்கு முதலில் அதன் ரத்த ஓட்டத்தை வேகமாக்கி செயல்பட வைப்பது தான். அதற்கு மசாஜ் பெரு உதவி செய்கிறது.
விளக்கெண்ணையை இரண்டு விரல்கள் நுனியில் மட்டும் எடுத்துக் கொண்டு புருவத்தில் நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். அதாவது புருவத்தில் இருந்து கண்களுக்கு அடுத்த பக்கம் கொண்டு சென்று கண்ணம் நோக்கி இழுத்து பிறகு மூக்கு மேல் அப்படியே புருவத்திற்கு அதாவது கண்களை வட்டமடிக்கும்படி புருவத்தை நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் ஒரு புருவத்திற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே மசாஜ் செய்தால் போதும். இதுபோல முப்பது நாட்கள் அதாவது ஒரு மாதம் தவறாமல் தினமும் செய்ய வேண்டும். இடையில் புருவத்தை திருத்தம் செய்வது செய்ய வேண்டாம். இரவு நேரங்களில் இவ்வாறு செய்துவிட்டு உறங்கவும்.
ஜோஜோபா எண்ணெய்
இந்த எண்ணை பற்றி பலருக்கும் அதிக அளவில் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த எண்ணெய் மிகவும் எடை குறைவான எண்ணெய். இந்த எண்ணெய் சருமத்திற்கும் முடிகளுக்கும் பல நன்மைகளை பயக்கும். இந்த எண்ணையை நேரடியாகவும் பயன்படுத்தலாம் மற்ற எண்ணெய்களோடு கலந்தும் பயன்படுத்தலாம்.
வைட்டமின் பி வைட்டமின் ஈ வைட்டமின் சி அடங்கிய இந்த ஜோகோபா எண்ணையில் மேலும் ஜிங்க்,அடங்கியுள்ளது. இந்த எண்ணையை முடிகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் இது முடியின் உற்பத்தியை அதிகப்படுத்தி முடியை வலுவாக மாற்றுகிறது. சிலருக்கு புருவ முடி லேசாக உதிரும். அதுபோன்ற உயிர்களை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த ஜோஜோபா எண்ணைக்கு உள்ளது. மேலும் சிலருக்கு புருவம் முடிகளில் முடி வளரும் அந்த ஓட்டையானது ஏதேனும் நாம் பயன்படுத்தும் கிரீம் அல்லது பவுடர்களினால் அடைக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற அழைப்பினை இந்த ஜோஜோபா எண்ணெய் அடைப்பை எடுத்து முடியும் வளர்ச்சிக்கு தூண்டுகோளாக உள்ளது.
எப்படி பயன்படுத்தலாம்?
ஜோஜோபா எண்ணையை சிறிதளவு கைவிரல் நுனிகளில் மட்டும் எடுத்துக்கொண்டு நன்றாக புருவங்களில் மசாஜ் செய்யவும். ஒவ்வொரு புருவங்களையும் ஐந்து நிமிடங்கள் என்ற கணக்கில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே மசாஜ் செய்தால் போதும். இரவு நேரங்களில் இவ்வாறு செய்வது அதிக பலனை தரும்.
வைட்டமின் ஈ ஆயில்
வைட்டமின் ஈ நிறைந்த பொருட்களில் இருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகின்ற ஆயுள் தான் இந்த வைட்டமின் ஈ எண்ணெய் ஆகும். இந்த ஒரு எண்ணை மட்டுமே போதும் உங்கள் புருவ முடியை அடர்த்தியாக வளர வைப்பதற்கு.
மருந்தகங்களில் அதிக அளவில் வைட்டமின் இ டேப்லெட் என்று கிடைக்கும். ஒரு டேப்லெட்டை மட்டுமே ஒரு நாளைக்கு பயன்படுத்தினால் போதும். அதாவது ஒரு டேப்லெட்டை நுனியில் லேசாக ஊக்கை கொண்டு துளையிட்டு அதிலிருந்து வரும் விட்டமின் ஈ ஆயிலை புருவங்களில் அப்ளை செய்து மசாஜ் செய்து வரவும்.
இரவு நேரங்களில் தினமும் இதுபோல புருவங்களில் வைட்டமின் ஈ எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். பிறகு உங்கள் நண்பர்களே கேட்பார்கள் உன் புருவ முடியை என்ன செய்தாய்? எப்படி இவ்வளவு விரைவாக உனக்கு மட்டும் அடர்த்தியாக வளர்ந்தது என்று. எளிதில் அவ்வளவு அடர்த்தியாகவும் கருமையாகவும் புருவம் முடி வளரும்.
ஆலிவ் எண்ணெய்
இயற்கையாகவே ஆலிவ் எண்ணெயை திரவ தங்கம் என்று அழைப்பார்கள். அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை சமையலுக்கும் அதிகமாக இந்த ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இது உதவுகிறது. இப்படிப்பட்ட ஆலிவ் எண்ணெய் புருவ முடி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இந்த அழிவு எண்ணையில் வைட்டமின் ஈ குறைவாக இருக்கும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு லேசாக இதனை சூடு படுத்தி பிறகு விரல் நுனியில் எடுத்து புருவத்தின் மேல் நன்றாக மசாஜ் செய்யவும். குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு இவ்வாறு செய்துவிட்டு பிறகு குளித்து வரலாம்.
இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் புருவம் முடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் கருமை நிறமாகவும் அழகான தோற்றத்துடனும் காட்சியளிக்கும். மேலும் புருவமுடி பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும்.